ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

'தாமிரபரணி, பூஜை' படங்களுக்குப் பிறகு இயக்குனர் ஹரி, நடிகர் விஷால் மீண்டும் இணைந்துள்ள படம் 'ரத்னம்'. இந்தப் படமும் ஒரு ஆக்ஷன் படமாகத்தான் படமாகி வருகிறது. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார்.
இப்படத்திற்கான தன்னுடைய படப்பிடிப்பை முடித்துவிட்டார் விஷால். அது குறித்து, “யெஸ், யெஸ், யெஸ்… 'ரத்னம்' படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டேன். ஹரி சாருடன் மூன்றாவது முறையாகவும் மற்றும் டார்லிங் ஒளிப்பதிவாளர் சுகுமார், மொத்த குழுவுடன் இணைந்து பணியாற்றியது உண்மையாகவே மகிழ்ச்சி. தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னை என ஆரம்பம் முதல் ஒரு நேர்மறையான சூழலில் பணி புரிந்தது வாழ்க்கையில் எப்போதும் மறக்க முடியாத ஒன்று.
படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் மற்றும் குழுவினருக்கு நன்றி. விரைவில் டார்லிங் தேவிஸ்ரீ பிரசாத்தின் சூப்பரான சிங்கிள் டிராக்கை வெளியிட உள்ளோம். ஆக்ஷன் படப் பிரியர்களுக்கு இப்படம் கொண்டாட்டமாக இருக்கும்.
இந்த குடும்பப் பாங்கான படம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விதத்தில் திரையில் பார்ப்பதற்கு இருக்கும். இது கோடை விடுமுறை டிரீட். விரைவில் பட வெளியீடு பற்றிய அறிவிப்பு வரும். நன்றி, கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” என விஷால் குறிப்பிட்டுள்ளார்.