ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி, பின்னர் பெரிய ஹீரோ ஆனவர் பிரபுதேவா. ஆனால் அவரது மார்க்கெட் சரியத் தொடங்கியபோது திடீரென இயக்குனர் அவதாரம் எடுத்தார். முதலில் தமிழ், தெலுங்கில் படங்கள் இயக்கி வந்தவர், வான்டட் என்ற படத்தின் மூலம் இந்தியிலும் பிரவேசித்தார். அப்படம் எதிர்பாராத வகையில் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்ததால், பிரபுதேவாவை கவனிக்கத் தொடங்கியது பாலிவுட் பட உலகம். அதனால் தொடர்ச்சியாக படங்கள் இயக்கி வரும் அவர், அடுத்தடுத்து 4 இந்தி படங்களை இயக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.
தற்போது தனது தாய்மொழியான தெலுங்கில் சோனுசூட், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ராமைய்யா வாஸ்த வைய்யா என்ற படத்தை இயக்கி வருபவர், இதை முடித்ததும் ராம்போ ராஜ்குமார் என்ற படத்தை இந்தியில் ஷகீத்கபூரை வைத்து இயக்குகிறார். அவரிடத்தில், முழு நேர இயக்குனராகி விட்டீர்கள். நடிக்கும் ஐடியா இல்லையா? என்று கேட்டால், சமீபத்தில்கூட ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் என்ற படத்தில் நடித்தேன். காரணம், அதில் எனக்கு பொருத்தமான, பிடித்தமான வேடம் கிடைத்தது. அதனால் எனக்கேற்ற கதைகள் அமைகிறபோது கண்டிப்பாக நடிப்பேன் என்கிறார் பிரபுதேவா.