நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரை உலகில் முடிசூடா ராணியாக வலம் வந்த ராதிகா சரத்குமார், தன்னுடைய ராடான் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளார். தவிர்க்க முடியாத காரணங்களால் சித்தி-2 சீரியலை விட்டு பாதியிலேயே விலகிவிட்ட அவர், அதன்பின் கலைஞர் மற்றும் விஜய் டிவியில் சில சீரியல்களை தயாரிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் அவர் தற்போது புதுப்பொலிவுடன் ஹெச்டி தரத்தில் மீண்டு வந்திருக்கும் பொதிகை தொலைக்காட்சிக்காக ‛தாயம்மா குடும்பத்தார்' என்ற தொடரை தயாரித்து நடிக்கிறார். மேலும், இதில் சந்திரமுகி படத்திலும், வேலன் உள்ளிட்ட சில சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாகவும் கலக்கிய பிரகர்ஷிதா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது ரசிகர்களுக்கான சர்ப்ரைஸாக அமைத்துள்ளது. மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள தாயம்மா குடும்பத்தார் சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.