பாடகி கெனிஷா உடன் ஜோடியாக வந்த ரவி மோகன் : தந்தை என்பது பெயர் அல்ல பொறுப்பு என ஆர்த்தி ரவி காட்டம் | டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | மீண்டும் போதையில் கலாட்டா ; ஜெயிலர் வில்லன் கைதாகி ஜாமினில் விடுதலை | காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் | 'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! |
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ராதிகா ஆப்தே மும்பை விமான நிலையத்தில் விமான பயணம் மேற்கொள்ள சென்றபோது நடைபாதை மேம்பாலத்தில் என்ன ஏது என்று காரணம் சொல்லப்படாமலேயே இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பல பயணிகளுடன் சேர்ந்து அடைத்து வைக்கப்பட்டதாக கூறி தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் நடிகர் டிரம்ஸ் சிவமணிக்கும் சமீபத்தில் கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு காத்திருப்பு நிகழ்வு ஏற்பட்டது. ஆனால் அதை அவர் எதிர்கொண்ட விதம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி உள்ளது.
சமீபத்தில் கொச்சிக்கு விமானப்பயணம் மேற்கொண்ட டிரம்ஸ் சிவமணி விமான நிலையத்தில் இறங்கி கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் வரை தனது லக்கேஜ்களை பெறுவதற்காக காத்திருந்தார். அவருடன் பயணித்த சக பயணிகள் பலரும் இதேபோல காத்திருந்து, ஒரு கட்டத்திற்கு மேல் டென்ஷன் ஆனார்கள். ஆனால் டிரம்ஸ் சிவமணி அவர்களை மட்டுமல்ல தன்னையும் கூட டென்ஷனை குறைத்து கூல் செய்யும் விதமாக எஸ்கலேட்டரின் அருகில் உள்ள கைப்பிடி சுவரில் குச்சிகளை வைத்து ஏ.ஆர் ரஹ்மானின் ஹம்மா ஹம்மா என்கிற பாடலுக்கு ஏற்றபடி இசையமைக்க ஆரம்பித்து விட்டார்.
அங்கிருந்த சக பயணி ஒருவர் இதனை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் கூறும்போது, “40 நிமிட காத்திருப்பு காரணமாக நாங்கள் எல்லோரும் போராட்டம் தான் நடத்தி இருக்க வேண்டும். மாறாக எங்கள் அனைவரையும் பொழுதுபோக்கும் மனநிலைக்கு கொண்டு வந்து விட்டார் சக பயணி ஒருவர்” என்றும் டிரம்ஸ் சிவமணி குறித்து கூறியுள்ளார்.