இந்த ஆண்டும் சாதனை மாணவர்களை சந்திக்கிறார் விஜய் | யுவன் இசையில் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' தெலுங்குப் படம் | இரண்டு தயாரிப்பாளர்களால் கமல்ஹாசனுக்கு நெருக்கடி | நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் |
விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சி தொகுப்பாளரான வீஜே பிரியங்கா தேஷ்பாண்டே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மேலும் பெயர் புகழுடன் வலம் வருகிறார். பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியங்கா முன்னதாக பல மேடைகளில் தனது கணவர் குறித்து நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார். ஆனால், சமீபகாலங்களில் பிரியங்கா தனது கணவர் குறித்து பேசுவதில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கூட எந்தவொரு இடத்திலும் தனது கணவர் பற்றி பேசவில்லை. இதனால் இருவரும் பிரிந்துவிட்டார்களா? என்று அப்போதே கேள்விகள் எழுந்தது. ஆனாலும், பிரியங்கா தரப்பிலிருந்து அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை.
இந்நிலையில், ப்ரியங்கா தனது அம்மாவுடன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றை கொடுத்திருந்தார். அப்போது பேசிய பிரியங்காவின் தாயார், 'பிரியங்காவை நினைத்து நான் மிக பெருமைப்படுகிறேன். ஆனால், இப்போது அவள் வாழ்க்கையில் செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்று சத்தியம் செய்ய வேண்டும். சரியான நபரை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார். இதன் மூலம் பிரியங்கா தனது காதல் கணவர் பிரவீனை பிரிந்துவிட்டார் என்பது உறுதியாகியுள்ளது.