பாடகி கெனிஷா உடன் ஜோடியாக வந்த ரவி மோகன் : தந்தை என்பது பெயர் அல்ல பொறுப்பு என ஆர்த்தி ரவி காட்டம் | டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | மீண்டும் போதையில் கலாட்டா ; ஜெயிலர் வில்லன் கைதாகி ஜாமினில் விடுதலை | காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் | 'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! |
மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவிக்க தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று ஜனவரி 19ம் தேதி சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் இரங்கல் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இந்த விழாவில் இன்றைய நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், மற்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். நாசர் தலைமையிலான அணியுடன் போட்டியிட்டு தோல்வியடைந்த முந்தைய நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி ஆகியோர் கலந்து கொண்டு அவர்களது பெருந்தன்மையை வெளிப்படுத்தினர். விஜயகாந்த்துடன் அவர்களுக்கு இருந்த நட்பை, பாசத்தை அது வெளிப்படுத்தியது.
நேற்றைய இரங்கல் கூட்டத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்களான பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் நடத்தினர். கூட்டத்தில் நடிகர்கள் சிவக்குமார், கமல்ஹாசன், சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர், விக்ரம், ஜெயம் ரவி, சத்யராஜ், பார்த்திபன், விஜய் ஆண்டனி, ரகுமான், பொன்வண்ணன், ஆனந்தராஜ், பசுபதி, ராஜேஷ், சின்னி ஜெயந்த், மன்சூரலிகான், எம்எஸ் பாஸ்கர், விக்னேஷ், ரவி மரியா, ஜெயப்பிரகாஷ், ஸ்ரீமன், ரெடின் கிங்ஸ்லி, நடிகைகள் லதா, அம்பிகா, ராதா, சரண்யா, சிம்ரன், ரேகா, தேவயானி, காயத்ரி ரகுராம், ரித்விகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விஜயகாந்த் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன், மைத்துனர் சுதீஷ் மற்றும் திரையுலகத்தைச் சார்ந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் சிலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்த விழாவில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டவர்களும், இன்றைய இளம் கதாநாயகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. மற்ற மொழிகளிலிருந்தும் எந்த ஒரு நடிகரும் வரவில்லை. விஜயகாந்த் மறைவில் எந்தவிதமான அஞ்சலி நிகழ்விலும் அஜித் கலந்து கொள்ளவில்லை. விஜயகாந்த் மறைவின் போது பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட வடிவேலு நேற்றைய இரங்கல் கூட்டத்திற்கு வரவில்லை.
நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர்
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.கே.செல்வமணி, மன்சூரலிகான், டி.சிவா உள்ளிட்ட பலரும் தற்போது கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் யாரும் பதிலளிக்கவில்லை.
துணை தலைவர் பூச்சி முருகன் பேசும்போது, “அனைவருடையே கோரிக்கையும் நியாயமானது. என்றாலும் சங்கத்தின் செயற்குழு, பொதுக்குழுதான் முடிவு செய்யும்” என்றார்.