22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
தெலுங்கு திரையுலகின் மறைந்த மூத்த நடிகரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி ராமாராவின் 25வது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையடுத்து என்.டி.ராமராவ் மகன்களில் ஒருவரும், பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா தனது தந்தையின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இதற்கு முன்னதாக என்.டி.ராமராவின் பேரன்களான நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் கல்யாணம் ராம் ஆகியோரும் தங்களது தாத்தாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர்.
பின்னர் பாலகிருஷ்ணா வந்தபோது அங்கே ஜூனியர் என்டிஆர், கல்யாண் ராம் மற்றும் அவர்களின் தந்தை ஹரி கிருஷ்ணா ஆகியோரின் பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதனை எடுத்து அப்புறப்படுத்தி வெளியே வைக்கும்படி தனது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார் பாலகிருஷ்ணா. அதன்படியே அந்த பேனர்கள் வெளியே கொண்டு வந்து வைக்கப்பட்டன. இது குறித்த வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலகிருஷ்ணாவின் இந்த செயல் இது என்.டி.ராமராவ் குடும்பத்தினருக்கு இடையே உள்ள பனிப்போரை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.