நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகம் பிரபலமான நபர்களில் பூர்ணிமாவும் ஒருவர். இந்த சீசனில் மாயாவிற்கு அடுத்தபடியாக நேயர்களால் அதிகம் வெறுக்கப்பட்ட நபரும் பூர்ணிமா தான். இந்நிலையில், சோஷியல் மீடியாவில் தன்னை பற்றி பல விமர்சனங்கள் வருவதை பார்த்த பூர்ணிமா தனது ஹேட்டர்ஸ்களுக்காக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'என் மீது அன்பை பொழிந்ததற்கும், என் குறைகளை ஏற்றுக்கொண்டதற்கும் நன்றி. என்னுடைய ரசிகர்கள் என்னை மட்டுமல்லாமல் மற்றவர்களையும் ரசியுங்கள். ஆனால் ஒருவரையும் வெறுக்காதீர்கள். என்னை வெறுப்பவர்களாக இருந்தாலும் கூட பதிலுக்கு வெறுக்க வேண்டாம். வேண்டுமென்றால் காதலியுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.