ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

சமீபத்தில் வெளியான சலார் திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிரித்விராஜ் தெலுங்கில் மட்டுமல்ல தற்போது தனது சொந்த மொழியான மலையாளத்தில் உருவாகி வரும் குருவாயூர் அம்பலநடையில் என்கிற படத்திலும் ஒரு வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜெய ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படத்தை இயக்கிய விபின் தாஸ் என்பவர் தான் இந்த படத்தை இயக்குகிறார்.
அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த மின்னல் முரளி பட இயக்குனர் பசில் ஜோசப் கதாநாயகனாக நடிக்கிறார். இது தவிர நடிகர் யோகிபாபு இந்த படத்தில் நடிப்பதன் மூலம் முதன்முறையாக மலையாள திரை உலகில் அடி எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக நிகிலா விமல் மற்றும் அனஸ்வரா ராஜன் இருவரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.