ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தெலுங்கு திரையுலகில் மிகக்குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டவர் இளம் நடிகை ஸ்ரீ லீலா. சமீபத்தில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகி உள்ள குண்டூர் காரம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்னும் சில முன்னணி நடிகர்களின் படங்களின் நடிக்கவும் ஒப்பந்தமாகி வருகிறார்.
இந்த நிலையில் இவரது பிரபலத்தை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இவரை தேடி பல விளம்பர பட வாய்ப்புகள் வந்தன. அதில் பெரும்பாலானவை ஆன்லைன் சூதாட்டங்கள் மற்றும் ஆல்கஹால் சம்பந்தப்பட்ட பொருட்களை முன்னிலைப்படுத்தும் விளம்பரங்கள் தான்..
ஆனால் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ள ஸ்ரீ லீலா இந்த விளம்பரங்களில் நடிப்பதற்கு மிகப்பெரிய அளவில் சம்பளம் தருவதாக சொல்லப்பட்டும் கூட இவற்றில் நடிக்க மறுத்துவிட்டாராம். சில முன்னணி நடிகர்கள் இதுபோன்ற விளம்பரங்களின் நடித்துவிட்டு மக்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், தாங்கள் நடித்த விளம்பரங்களுக்கு சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு சமாளிப்பதையும் சமீப காலமாக நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஸ்ரீ லீலாவின் இந்த முடிவு பாராட்டத்தக்கது என ரசிகர்கள் கூறி உள்ளனர்.