திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
தெலுங்கு திரையுலகில் மிகக்குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டவர் இளம் நடிகை ஸ்ரீ லீலா. சமீபத்தில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகி உள்ள குண்டூர் காரம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்னும் சில முன்னணி நடிகர்களின் படங்களின் நடிக்கவும் ஒப்பந்தமாகி வருகிறார்.
இந்த நிலையில் இவரது பிரபலத்தை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இவரை தேடி பல விளம்பர பட வாய்ப்புகள் வந்தன. அதில் பெரும்பாலானவை ஆன்லைன் சூதாட்டங்கள் மற்றும் ஆல்கஹால் சம்பந்தப்பட்ட பொருட்களை முன்னிலைப்படுத்தும் விளம்பரங்கள் தான்..
ஆனால் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ள ஸ்ரீ லீலா இந்த விளம்பரங்களில் நடிப்பதற்கு மிகப்பெரிய அளவில் சம்பளம் தருவதாக சொல்லப்பட்டும் கூட இவற்றில் நடிக்க மறுத்துவிட்டாராம். சில முன்னணி நடிகர்கள் இதுபோன்ற விளம்பரங்களின் நடித்துவிட்டு மக்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், தாங்கள் நடித்த விளம்பரங்களுக்கு சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு சமாளிப்பதையும் சமீப காலமாக நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஸ்ரீ லீலாவின் இந்த முடிவு பாராட்டத்தக்கது என ரசிகர்கள் கூறி உள்ளனர்.