நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தனுஷின் கேப்டன் மில்லர் படம் ரிலீஸாகி உள்ளது. அடுத்து அவரது நடிப்பில் தனுஷின் 50வது படம் வெளியாக உள்ளது. இதை தனுஷ் இயக்கி, நடித்துள்ளார். தனுஷ் தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51வது படத்தில் நடிக்கவுள்ளார். இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நாகார்ஜூனா நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இதன் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி 24ம் தேதி அன்று தொடங்குகிறது என தகவல் வெளியாகியுள்ளது. கூடுதலாக, இதன் படப்பிடிப்பு மும்பை, கொச்சி ஆகிய பகுதிகளில் முதற்கட்டமாக நடைபெறும் என்கிறார்கள்.