நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் வடிவேலு ஒரு மிகச் சிறந்த நடிகர் என்ற போதும் தன்னுடன் நடித்த சக நடிகர்களின் இறப்புக்கு கூட செல்லாதவர். இதன் காரணமாகவே தற்போது அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். குறிப்பாக சமீபத்தில் போண்டாமணி, விஜயகாந்த் ஆகியோரின் இறப்புக்கு அவர் செல்லாதது பெரிய அளவில் அவர் மீது அதிருப்தி மனநிலையை உருவாக்கி இருக்கிறது. இத்தனைக்கும் விஜயகாந்த் வீட்டுக்கு அடுத்த தெருவில்தான் வடிவேலுவின் வீடு உள்ளது.
இந்த நிலையில், வடிவேலுவுடன் சில படங்களில் நடித்துள்ள காமெடியன் பெஞ்சமின் கூறுகையில், ‛‛போண்டா மணி, நான் உள்ளிட்ட பல நடிகர்கள் மக்களின் கவனத்திற்கு வந்தது வடிவேலுவால்தான். காரணம் உண்மையிலேயே அவர் ஒரு பிறவிக் கலைஞன். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனபோதிலும் அவர் ஒரு நல்ல மனிதர் கிடையாது. குறிப்பாக படப்பிடிப்பு தளங்களில் நாங்கள் எல்லாம் சாப்பாடு கிடைக்காமல் திண்டாடினால் கூட அது குறித்து வடிவேலு ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டார். நாங்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு ரோட்டில் நின்றால் கூட அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவர் ஜாலியாக கேரவனில் அமர்ந்திருப்பார். அதேசமயம், கேப்டன் விஜயகாந்த் போன்ற நடிகர்கள் சக நடிகர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பான்மை கொண்டவர்கள். விஜயகாந்த்தை பொருத்தவரை தனது யூனிட்டில் அனைவரையும் சாப்பிட வைத்து அழகு பார்க்கக் கூடியவர். யார் மனதும் நோகும்படி நடந்து கொள்ள மாட்டார் என்று பெஞ்சமின் கூறி உள்ளார்.