ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்த 'அயலான்' படத்தை ஆர்.ரவி குமார் இயக்கி உள்ளார். பல்வேறு பிரச்னைகளால் நீண்டநாள் தயாரிப்பில் இருந்த இந்த படம் ஒரு வழியாக நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. கடைசி நிமிடம் வரை கடும் போராட்டத்திற்கு பிறகு படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சம்பளம் பெறாமல் நடித்தார் சிவகார்த்திகேயன். கடைசியாக தயாரிப்பாளரின் 25 கோடி ரூபாய் கடனுக்கு பொறுப்பேற்று படத்தை வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று படம் வெளியானதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் எழுதியிருப்பதாவது : வெற்றி பெறும் ஒவ்வொரு மனிதன் பின்னாலும் ஒரு வலி மிகுந்த கதை இருக்கும். அந்த வலி மிகுந்த கதை ஒரு வெற்றிகரமான முடிவைத் தரும். அந்த வலியை ஏற்றுக் கொண்டு வெற்றிக்குத் தயாராகுங்கள். என பதிவிட்டுள்ளார்.