ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

சலார் படத்திற்கு பின் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்ட படம் 'கல்கி 2898 ஏடி'. நாக் அஸ்வின் இயக்குகிறார். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இது புராணக் கதைகளால் ஈர்க்கப்பட்ட.. எதிர்காலத்தில் நடைபெறும் அறிவியல் புனைவு படைப்பாகும்.
வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் பிரமாண்டமாய் தயாரிக்க, பன்மொழிகளில் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு வளர்ந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். அதன்படி 'கல்கி 2898 ஏடி' படம் வரும் மே மாதம் 9ம் தேதி வெளியாகிறது.
வாரணாசி, மும்பை, டெல்லி, சண்டிகர், சென்னை, மதுரை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், குண்டூர், பீமாவரம், காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல முக்கியத்துவம் வாய்ந்த மாநகரங்களில் 'கல்கி 2898 AD' படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள் பிரம்மாண்டமாக வெளியிட்டனர். இதற்காக விஜயவாடாவில் நடைபெற்ற பிரத்யேக அணிவகுப்பு... பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தது.
படத்தை தயாரிக்கும் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் சி. அஸ்வினி தத் கூறுகையில், ‛‛நட்சத்திர கலைஞர்களுடன் தயாராகும் 'கல்கி 2898 ஏடி' படத்தின் வெளியீடு(மே 9, 2024) எங்களுக்கு ஒரு சிறப்பான தருணத்தை தருகிறது. எங்கள் நிறுவனத்தின் மைல் கல்லான ஐம்பதாவது ஆண்டுடன் இப்படம் இணைந்துள்ளது. எங்கள் பயணத்தை நாங்கள் தொடரும்போது அதை இந்த திரைப்படம் மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது'' என்றார்.