ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஹிந்தி மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் உருவாகியுள்ள படம் மெர்ரி கிறிஸ்துமஸ். விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கத்ரீனா கைப் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இதற்கான பிரிமியர் காட்சி சமீபத்தில் பிரபலங்களுக்காக திரையிடப்பட்டது. விஜய்சேதுபதியின் நண்பரும் அவரது ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவருமான விக்னேஷ் சிவன் இந்த படத்தை பார்த்துட்டு தனது பாராட்டுக்களை சோசியல் மீடியா பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தில் விஜய்சேதுபதி மற்றும் கத்ரீனா இருவரின் நடிப்பையும் பார்த்து திகைத்துப் போய் விட்டேன். படத்தில் திரில்லிங்கான திரைக்கதையை கையாண்டுள்ளார் ஸ்ரீராம் ராகவன். படத்தின் கடைசி 30 நிமிடங்களை பார்க்கும் போது ஆல்பர்ட் ஹிட்ச்காக் காலத்திற்கே சென்று விட்டது போல இருந்தது. படத்தின் இசையமைப்பாளர் பிரீத்தமின் இசை இன்னொரு முக்கியமான தூண் என்று சொல்லலாம். மக்கள் செல்வன் விஜய்சேதுபதியை பார்த்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.
ஹாலிவுட் இயக்குனர் ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் படங்கள் என்றாலே திகிலும் த்ரிலும் கலந்தவையாக இருக்கும். படம் பார்ப்பவர்களை திகிலில் உறைய வைக்கும். அப்படி ஒரு அனுபவத்தை மெர்ரி கிறிஸ்துமஸ் தந்ததாக பாராட்டி உள்ளார் விக்னேஷ் சிவன்.