நாங்கள் பிரிகிறோம் : ஜிவி பிரகாஷ் - சைந்தவி அறிவிப்பு | ஸ்டார் படத்தின் முதல்வார வசூல் நிலவரம் இதோ | பத்து நாளில் 55 கோடி வசூலித்த அரண்மனை 4 | திரிஷாவின் ஐடென்டிட்டி படப்பிடிப்பு நிறைவு | நடிகர் சங்கத்திற்கு தனுஷ் ரூ.1 கோடி நிதி | மே 17 ரிலீஸ் : இந்த வாரமும் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா? | நான் எந்தக் கட்சியும் சாராதவன் - அல்லு அர்ஜுன் விளக்கம் | மீண்டும் தமிழுக்கு வரும் திகங்கனா சூரியவன்ஷி | சினிமாவில் தொடர்ந்து நடிக்காதது ஏன் : மோகன் விளக்கம் | தமிழில் வெளியாகும் 'டபுள் ஐ-ஸ்மார்ட்' |
சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர் தமிழில் சில படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல் நடிகை மஹாலெட்சுமியை திருமணம் செய்ததால் சில நாட்கள் சோஷியல் மீடியாவில் இருவரும் டிரெண்டிங் ஜோடியாக இடம் பிடித்து வந்தனர். தொடர்ந்து பணமோசடி வழக்கில் கைதாகி சர்ச்சையில் சிக்கி அண்மையில் தான் வெளிவந்தார்.
இந்நிலையில், சிறையிலிருந்து வெளிவந்த ரவீந்தர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து கொண்டிருந்த போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டதாகவும் தெரிய வந்தது. இதனையடுத்து ரவீந்தர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மூக்கில் ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்ட ரவீந்தரை ரசிகர்கள் உடம்பை கவனிக்க சொல்லி அட்வைஸ் செய்து வருகின்றனர்.