மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
ரோஜாவனம், ராமகிருஷ்ணா உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர், ஜெய் ஆகாஷ். ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆயுதப்போராட்டம், ஜெய் விஜயம், காதலன் காதலி, காதலுக்கு கண்ணில்லை, உள்பட சில படங்களை இயக்கி நடித்துள்ளார். தற்போது தயாரித்து இயக்கி நடித்துள்ள படம், 'மாமரம்'. கிகி வாலஸ், 'காதல்' சுகுமார், பிரம்மானந்தம், ராகுல் தேவ் நடித்துள்ளனர். பால் பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளர், பாடல்களுக்கு நந்தா இசை அமைத்துள்ளார். சதீஷ் குமார் பின்னணி இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து ஜெய் ஆகாஷ் கூறும்போது “இது எனது சொந்த காதல் கதை. நான் லண்டனில் வசித்தபோது ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்தேன். அவரும் என் மீது உயிராக இருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் என்னைவிட வசதியும், புகழும் அதிகம் கொண்ட ஒருவர் கிடைத்ததும் எனது காதலை உதறிவிட்டு சென்று விட்டார். அந்த கதையைத்தான் படமாக எடுத்துள்ளேன்.
அடிப்படையில் அவர் நல்லவர். அதனால் படத்திலும் அவரை நல்லவராக காட்டி இருக்கிறேன். அவரை காதலித்தபோது இருவரும் சேர்ந்து ஒரு மாமர செடியை நட்டு வைத்தோம், அந்த செடி இப்போது மரமாகி இருக்கிறது. அந்த செடியை வைத்ததில் இருந்து படத்தை தொடங்கி இப்போது வரை எனக்கு ஏற்பட்ட நினைவுகளை அவ்வப்போது படமாக்கி இப்போது முடித்திருக்கிறேன்” என்றார்.