அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் |
நெய்வேலியில் நடந்த படப்பிடிப்பில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்பி வைரலாக பரவியது. அதேபோன்று தற்போது அவர் ஐதராபாத்தில் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்பி வைரலாகி உள்ளது.
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். இவர்களுடன் சினேகா, லைலா, பிரேம்ஜி, பிரசாந்த், பிரபுதேவா, நிதின் சத்யா, வைபவ், ஜெயராம், மைக் மோகன் உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் தொடங்கியது. இதையடுத்து தாய்லாந்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்தது. 3வது கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் ஐதராபாத்தில் தொடங்கியது. புத்தாண்டு விடுமுறை மற்றும் 'கலைஞர் 100' விழா விடுமுறைக்கு பிறகு மீண்டும் தொடங்கி உள்ளது. இதில் விஜய் தாடி மீசை எடுத்து இளம் வயது தோற்றத்தில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை காண தினசரி ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று படப்பிடிப்பு முடிந்ததும் தன்னை காண குவிந்திருந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளார். இளமையான தோற்றத்தில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்பி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.