சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
விஜய் இயக்கத்தில், விஜய் நடிக்கும் தலைவா படத்தில் நாயகியாக நடித்து வருபவர் அமலாபால். ஆரம்பத்தில் இப்படத்தில் இன்னொரு நாயகியாக மும்பையைச்சேர்ந்த ராகினி என்றொரு நடிகை நடித்ததால், தனது கதி அதோகதியாகி விடுமோ என்று ஆடிப்போயிருந்த அமலா, இப்போது தான்தான் முதன்மை நாயகி என்பது ஊர்ஜிதமாகி விட்டதால் சகஜமான மனநிலைக்கு திரும்பிவிட்டார். ஸ்பாட்டில் எந்நேரமும் ஒரே அரட்டை அமர்க்களம்தானாம். ஒரு சிறிய கேப் கிடைத்தாலும், கூட்டணியாக சிலரை சேர்த்துக்கொண்டு, சீட்டாட்டத்தை தொடங்கி விடுகிறார். அப்படி பழகிய பழக்கம், சமீபத்தில் அப்படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடந்தபோதும் தொடர்ந்திருக்கிறது.
அங்கு படப்பிடிப்பு இல்லாமல் ஓய்வாக இருக்கும் நாட்களில் தனது சக நண்பர்களுடன் ஊர் சுற்றிப்பார்க்க கிளம்பிய அமலாபால், அங்கு கண்ணில் தென்பட்ட ஒரு சூதாட்ட விடுதிக்குள் நுழைந்து விட்டார். அங்கு உள்ளூர்வாசி மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்த பலரும் கூட்டம் கூட்டமாக சூதாட்டம் விளையாடியுள்ளனர். அமலாபால் சூதாட்ட களத்தில் இறங்கியுள்ளார். ஆரம்பத்தில் கொஞ்சம் பணத்தை இழந்துள்ளார். பின்னர் நடிகர் சுரேஷ் உடன் சேர்ந்து கொண்டு சூதாட்டம் ஆடி கொஞ்சம் பணமும் சம்பாதித்தார்.
இதுகுறித்து நடிகை அமலாபால் கூறும்போது, சூதாட்டத்தில் எனக்கு லக்கி ஜோடி சுரேஷ்தான். நானும் அவரும் ஒரு ஆட்டத்தில் வென்றோம் என்று மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.