ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், ஷாரூக்கான், டாப்சி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ம் தேதி வெளிவந்த படம் 'டங்கி'. கடந்த 20 நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் 444 கோடி வசூலைப் பெற்றதாக தயாரிப்பு நிறுவனமே நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஷாரூக் நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த 'பதான், ஜவான்' ஆகிய இரண்டு படங்களுமே ஆக்ஷன் படங்களாக அமைந்து தலா ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. ஆனால், 'டங்கி' படம் உணர்வுபூர்வமான கதையுடன் கொஞ்சம் நகைச்சுவை கலந்த படமாக இருந்தது. மற்ற இரண்டு படங்களைப் போல ரசிகர்களிடத்திலும், விமர்சகர்களிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெறத் தவறியது. சுமாரான படம் என்றே பலரும் கூறியிருந்தார்கள்.
இருந்தாலும் 'சலார்' போன்ற ஆக்ஷன் படங்கள் வந்ததாலும் அதையும் சமாளித்து இப்படம் 444 கோடி வசூலித்துள்ளதை பாலிவுட் ஆச்சரியத்துடன் பார்க்கிறது. மொத்தமாக கடந்த வருடத்தில் மட்டும் 2200 கோடி வசூலைத் தனித்து பெற்ற நடிகராக ஷாரூக் சாதனை புரிந்துள்ளார். சுமார் 150 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 'டங்கி' படம் தியேட்டர் வசூலில் லாபத்தையும், ஓடிடி, சாட்டிலைட் இதர உரிமைகளில் கிடைத்த வருவாயிலும் மிகவும் லாபரகமான படமாக அமைந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
ஒரே ஆண்டில் மூன்று வெற்றி, வசூல், லாபம் என்ற சாதனையை ஷாரூக்கானே மீண்டும் செய்வது சந்தேகம் என்பதுதான் பாலிவுட்டினரின் கருத்தாக உள்ளது.