நாங்கள் பிரிகிறோம் : ஜிவி பிரகாஷ் - சைந்தவி அறிவிப்பு | ஸ்டார் படத்தின் முதல்வார வசூல் நிலவரம் இதோ | பத்து நாளில் 55 கோடி வசூலித்த அரண்மனை 4 | திரிஷாவின் ஐடென்டிட்டி படப்பிடிப்பு நிறைவு | நடிகர் சங்கத்திற்கு தனுஷ் ரூ.1 கோடி நிதி | மே 17 ரிலீஸ் : இந்த வாரமும் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா? | நான் எந்தக் கட்சியும் சாராதவன் - அல்லு அர்ஜுன் விளக்கம் | மீண்டும் தமிழுக்கு வரும் திகங்கனா சூரியவன்ஷி | சினிமாவில் தொடர்ந்து நடிக்காதது ஏன் : மோகன் விளக்கம் | தமிழில் வெளியாகும் 'டபுள் ஐ-ஸ்மார்ட்' |
தெலுங்குத் திரையுலகின் இளம் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, தற்போது பான் இந்தியா நடிகையாக உயர்ந்துள்ள கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தெலுங்கில் இணைந்து நடித்த போது காதலில் விழுந்ததாக கிசுகிசு பரவியது.
'கீதா கோவிந்தம், டியர் காம்ரேட்' ஆகிய இரண்டு படங்களிலும் அவர்களது காதல் நடிப்பைப் பார்த்து வியக்காதவர்கள் இல்லை. அந்த அளவுக்கு அன்யோன்யமாக நடித்திருந்தனர். அதைப் பார்த்ததுமே அவர்களுக்குள் காதல் என பேச ஆரம்பித்துவிட்டார்கள். இருவரும் மாலத்தீவு டூர் கூட ரகசியமாக சென்று வந்தார்கள்.
அடிக்கடி அவர்களது காதல் பற்றி ஏதாவது செய்திகள் வெளியாகும். தற்போது இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம், பின்னர் திருமணம் என வெளியிட்டு வருகிறார்கள்.
ராஷ்மிகா தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த வருடம் தமிழில் 'வாரிசு', ஹிந்தியில் வசூலைக் குவித்த 'அனிமல்' ஆகிய படங்களில் நடித்தார். பிஸியாக இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு திருமண செய்தி வர ஏதும் காரணமா அல்லது உண்மையிலேயே நடக்க உள்ளதா என்பது குறித்து விஜய், ராஷ்மிகா இருவரில் யாராவது ஒருவர் சொன்னால்தான் தெரிய வரும்.