நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிக்க கன்னடத்தில் தயாரான 'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்களும் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த இரண்டு படங்களும் தியேட்டர்களிலும், ஓடிடி தளங்களிலும், டிவியிலும் அதிகம் ரசிக்கப்பட்ட படங்கள். அந்தப் படத்தைப் பற்றி பலரும் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிடும் அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியவை.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் அடுத்து வெளிவந்த 'சலார்' படம் 'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்கள் ஏற்படுத்திய பரபரப்பை சிறிது கூட ஏற்படுத்தவில்லை. தமிழ் ரசிகர்களிடம் அப்படம் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. 'கேஜிஎப்' சாயலிலேயே 'சலார்' படத்தை எடுத்திருந்தார் பிரசாந்த் நீல் என்பதுதான் பலரது விமர்சனங்களில் காணப்பட்டது.
தமிழகத்தில் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகாவிலும் இப்படம் வியாபார ரீதியாக பெரிய வசூலைக் குவிக்க முடியாமல் போனது. தெலுங்கு மாநிலங்களில் மட்டும்தான் படத்திற்கு வரவேற்பும், வசூலும் கிடைத்தது.
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்து வெளிவந்த பான் இந்தியா படங்களான 'சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ்,' ஆகிய படங்கள் தமிழில் வரவேற்பையோ, வசூலையோ பெறவில்லை. அந்த வரிசையில் 'சலார்' படமும் சேர்ந்துவிட்டது. அவரது நடிப்பில் அடுத்து வர உள்ள'கல்கி 2898 எடி' படமாவது அதை மாற்றுமா ?.