நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிக்க கன்னடத்தில் தயாரான 'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்களும் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த இரண்டு படங்களும் தியேட்டர்களிலும், ஓடிடி தளங்களிலும், டிவியிலும் அதிகம் ரசிக்கப்பட்ட படங்கள். அந்தப் படத்தைப் பற்றி பலரும் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிடும் அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியவை.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் அடுத்து வெளிவந்த 'சலார்' படம் 'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்கள் ஏற்படுத்திய பரபரப்பை சிறிது கூட ஏற்படுத்தவில்லை. தமிழ் ரசிகர்களிடம் அப்படம் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. 'கேஜிஎப்' சாயலிலேயே 'சலார்' படத்தை எடுத்திருந்தார் பிரசாந்த் நீல் என்பதுதான் பலரது விமர்சனங்களில் காணப்பட்டது.
தமிழகத்தில் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகாவிலும் இப்படம் வியாபார ரீதியாக பெரிய வசூலைக் குவிக்க முடியாமல் போனது. தெலுங்கு மாநிலங்களில் மட்டும்தான் படத்திற்கு வரவேற்பும், வசூலும் கிடைத்தது.
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்து வெளிவந்த பான் இந்தியா படங்களான 'சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ்,' ஆகிய படங்கள் தமிழில் வரவேற்பையோ, வசூலையோ பெறவில்லை. அந்த வரிசையில் 'சலார்' படமும் சேர்ந்துவிட்டது. அவரது நடிப்பில் அடுத்து வர உள்ள'கல்கி 2898 எடி' படமாவது அதை மாற்றுமா ?.