திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
இதுவரை திரைப்படங்களை இயக்கி வந்த சேரன் கடைசியாக 'திருமணம்' என்று படத்தை இயக்கினார். தற்போது வெப் தொடர் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளார். அவர் இயக்கி உள்ள 'ஜர்னி'(பயணம்) என்ற வெப் தொடர் வருகிற 12ம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியாகிறது. 9 எபிசோட்கள் கொண்ட இந்த தொடர் 5 பேரின் வாழ்க்கை பின்னணியில் விவசாயத்தை வலியுறுத்தும் தொடராக தயராகி உள்ளது.
சரத்குமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன், திவ்யபாரதி, கலையரசன், காஷ்யப் பார்பயா, ஜெயப்பிரகாஷ், மாரிமுத்து, வேல.ராமமூர்த்தி, அனுபமா குமார், 'நாடோடிகள்' பரணி, 'ஆடுகளம்' நரேன், இளவரசு, அஞ்சு குரியன் நடித்துள்ளனர். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, சி.சத்யா இசை அமைத்துள்ளார்.
இது குறித்து சேரன் கூறும்போது “இதுவரை 11 படங்களை இயக்கி இருக்கிறேன். இப்போது முதன் முறையாக ஒரு வெப் தொடரை இயக்கி உள்ளேன். சினிமாவில் 2 அல்லது இரண்டரை மணி நேரத்தில் கதை சொல்கிறோம். வெப்தொடரில் கதையை விரிவாகவும், மிக அழுத்தமாகவும் சொல்லலாம். 'ஜர்னி' அனைவருக்குமான கதை. எல்லோருமே இந்த தொடரின் கதையையோ அல்லது குறைந்தபட்சம் சில காட்சிகளையோ கடந்து சென்றிருக்க முடியும். பிரசன்னா, ஆரி அர்ஜுனன், கலையரசன், காஷ்யப் பார்பயா, திவ்யபாரதி ஆகிய 5 பேர் பற்றிய கதை இது. விவசாயத்தின் அவசியம் குறித்தும், அது ஆண்களுக்கு மட்டுமே சொந்தம் இல்லை, பெண்களுக்குமானது என்பதையும் பேசியிருக்கிறேன். விவசாயத்தைப் பற்றி பேசும் கேரக்டராக திவ்யபாரதி நடித்திருக்கிறார்” என்றார்.