ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

இன்று நேற்று நாளை என்ற படத்தின் இயக்குனரான ரவிக்குமார், அதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் என்ற படத்தை இயக்கியிருந்தார். சில ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த அப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இந்த படமும் அவரது முதல் படத்தை போலவே சயின்ஸ் பிக்சன் கதையில்தான் உருவாகி இருக்கிறது.
இதையடுத்து அவர் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையை உருவாக்கி அந்த கதையை சூர்யாவிடத்தில் கூறியிருக்கிறார். அதை கேட்ட அவர், தற்போது தனது கைவசமுள்ள படங்களில் நடித்து முடித்ததும் இந்த படத்தில் நடிப்பதாக ரவிக்குமாருக்கு உறுதி அளித்திருக்கிறாராம். அந்த வகையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் ‛இரும்புக்கை மாயாவி' படத்துக்கு பிறகு ரவிக்குமார் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பார் என்று தெரிகிறது.