ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் விஜய் டிவி புகழ் ஏற்கனவே விஜயகாந்த் மறைவின் போது அஞ்சலி செலுத்தியிருந்தாலும், அண்மையில் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புகழ், 'கேப்டன் நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார். சாப்பாடு போடுவார் என்று பலரும் சொல்வார்கள். அவருக்காக நான் என்ன செய்யலாம் என்று நினைத்தேன். எனவே, என்னுடைய ஆபிஸில் தினமும் 50 பேருக்கு சாப்பாடு போட முடிவு செய்திருக்கிறேன். என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். இதற்காக கேப்டனிடம் ஆசிர்வாதம் வாங்கவே இங்கு வந்தேன்' என்று கூறியுள்ளார். புகழின் இந்த செயலுக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.