திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
சின்னத்திரையில் குக் வித் கோமாளி முதல் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர் புகழ். அதோடு, பல திரைப்படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் மறைந்ததை அடுத்து அவரது நினைவிடத்தில் நேற்று நடிகர் புகழ் அஞ்சலி செலுத்த சென்றுள்ளார். அப்போது அவர் மீடியாக்களை சந்தித்தபோது, கேப்டன் ஐயாவின் மறைவுக்கு ஏற்கனவே நான் அஞ்சலி செலுத்தினேன். இன்று மீண்டும் அஞ்சலி செலுத்த வந்ததின் காரணம் பசி என்று வருபவர்களுக்கு வயிறார உணவளித்து அவர் வழி அனுப்பி வைத்ததாக கேள்விப்பட்டேன்.
நான் கூட சென்னைக்கு வந்த போது பக்கோடா, வாட்டர் பாட்டில் மட்டும் தான் மதிய உணவாக சாப்பிட்டு இருந்தேன். இந்த நிலையில் விஜயகாந்த் அவர்களின் ஆசீர்வாதத்தோடு இன்று முதல் சென்னை கே.கே நகரில் உள்ள எனது அலுவலகத்தில் தினமும் 50 பேருக்கு மதிய உணவு வழங்கப் போகிறேன். முதலில் 50 பேர் என்று ஆரம்பித்து நாளடைவில் அதை அதிகரிக்க போகிறேன். இது குறித்து விரைவில் விரிவான வீடியோ வெளியிடுவேன் என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் புகழ்.