நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரையில் குக் வித் கோமாளி முதல் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர் புகழ். அதோடு, பல திரைப்படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் மறைந்ததை அடுத்து அவரது நினைவிடத்தில் நேற்று நடிகர் புகழ் அஞ்சலி செலுத்த சென்றுள்ளார். அப்போது அவர் மீடியாக்களை சந்தித்தபோது, கேப்டன் ஐயாவின் மறைவுக்கு ஏற்கனவே நான் அஞ்சலி செலுத்தினேன். இன்று மீண்டும் அஞ்சலி செலுத்த வந்ததின் காரணம் பசி என்று வருபவர்களுக்கு வயிறார உணவளித்து அவர் வழி அனுப்பி வைத்ததாக கேள்விப்பட்டேன்.
நான் கூட சென்னைக்கு வந்த போது பக்கோடா, வாட்டர் பாட்டில் மட்டும் தான் மதிய உணவாக சாப்பிட்டு இருந்தேன். இந்த நிலையில் விஜயகாந்த் அவர்களின் ஆசீர்வாதத்தோடு இன்று முதல் சென்னை கே.கே நகரில் உள்ள எனது அலுவலகத்தில் தினமும் 50 பேருக்கு மதிய உணவு வழங்கப் போகிறேன். முதலில் 50 பேர் என்று ஆரம்பித்து நாளடைவில் அதை அதிகரிக்க போகிறேன். இது குறித்து விரைவில் விரிவான வீடியோ வெளியிடுவேன் என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் புகழ்.