மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் கடந்த டிச., 28ல் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். கடந்த டிசம்பர் 29, 2023 மாலை 7 மணிக்கு கனடா தமிழர்கள் விஜயகாந்த் அவர்களுக்கு டொரொண்டோவில் அஞ்சலி செலுத்தினர். கனடா தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் வள்ளிக்கண்ணன் மருதப்பன் அஞ்சலி உரையின் போது கேப்டன் விஜயகாந்த்தின் சிறந்த நடிகர், அரசியல் தலைவர், பாசமான நண்பர் என்றும் அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று குறிப்பிட்டார்.
படைப்பாளிகளின் உலகம் ஆசிரியர் நந்தன் கதிர்காமநாதன் விஜயகாந்த்திற்கு அஞ்சலி கவிதை பாடினார். இந்த அஞ்சலி கூட்டத்தில் எஸ்டேட் மண்டப உரிமையாளர் ராஜா, சமூகம் ஊடக நண்பர் கிருபா, செய்தி.காம் ஊடக நண்பர் குணா, பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா சுப்பிரமணி, சிறுமி.ஹரிணி வள்ளிக்கண்ணன் ஆகியோர் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்தி பேசினார்கள். ஊடக நண்பர்கள், சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.