நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த வாரம் மறைந்த போது அவருக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவும் பல முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்களில் சிலர் வெளிநாடுகளில் இருந்தனர். வருட இறுதி நாட்கள், புத்தாண்டு என குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தார்கள். அதனால், வர இயலவில்லை என்ற தகவல் வெளியானது.
தற்போது ஒவ்வொருவராக வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சரத்குமார், சசிகுமார், சிவகுமார், கார்த்தி ஆகியோர் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கடந்த இரண்டு நாட்களில் அஞ்சலி செலுத்தினர். வெளிநாட்டிலிருந்து மும்பை திரும்பிய சூர்யா, இன்று சென்னைக்கு வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் மாலை அணிவித்தும், சமாதி முன்பு அமர்ந்து சில நிமிடங்கள் அமர்ந்தும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
பத்திரிகையாளர்களிடம் அழுது கொண்டே பேசுகையில் விஜயகாந்துடன் இணைந்து 'பெரியண்ணா' படத்தில் நடித்த நாட்களை நினைவு கூர்ந்தார். ‛‛அண்ணனைப் போல யாரும் இல்லை. இறுதியாக அவரின் முகத்தை பார்க்க முடியாமல் போனது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் மறைந்தாலும் எப்போதும் அவரின் நினைவு இருக்கும்'' என்றார்.
அதன்பின்பு சூர்யா, கார்த்தி அவர்களது அப்பா சிவக்குமார் ஆகியோர் விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று அங்கு அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.