மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
நடிகர் அஜித்தை பொருத்தவரை தனது படப்பிடிப்பு நடக்கும் இடங்களில், தான் சுற்றுலா செல்லும் இடங்களில் எல்லாம் தன்னை சந்திக்கும் ரசிகர்களுடன் அவர்களது மனம் கோணாமல் சந்தோசமாக புகைப்படம் எடுத்துக் கொள்ளும் மனிதர் தான். ஆனாலும் சமீபத்தில் தன்னை வீடியோ எடுத்த ஒரு ரசிகரின் மொபைல் போனை அவரிடம் இருந்து வாங்கி அந்த வீடியோவை டெலீட் செய்துவிட்டு பின் அவரிடம் மீண்டும் செல்போனை கொடுத்துள்ளார் அஜித். இது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
அஜித் தன்னுடைய ரசிகர்களுடன் தாராளமாக புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் என்றாலும் அதை தன்னுடைய அனுமதியின் பேரில் ஒரு வரைமுறைக்குட்பட்டே அனுமதிக்கிறார். அவருடைய அனுமதியின்றி இந்த வீடியோ எடுக்கப்பட்டதால் தான், அஜித் கோபமாகி இதுபோன்று அந்த செல்போனை வாங்கி வீடியோவை அழித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. அஜித்தின் இந்த செயல் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.