கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக டாக்ஸிக் படப்பிடிப்பை மும்பைக்கு மாற்றிய யஷ் | விடாமல் துரத்திய போட்டோகிராபர்கள் : கோபமான சமந்தா | காந்தாரா 2 படப்பிடிப்பில் படகு விபத்து நடந்ததா? : தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் | “மஞ்சுவாரியரை அறிமுகப்படுத்த அவரது தந்தை என்னிடம் வாய்ப்பு கேட்டார்” : நெகிழ்ந்த ஊர்வசி | ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” |
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிச., 28ம் தேதி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் படத்தில் அறிமுகமாகி பின்னாளில் முன்னணி நடிகராக மாறிய சரத்குமார் வெளிநாட்டில் இருந்ததால் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்த அப்போது வரவில்லை.
தற்போது சென்னை திரும்பி உள்ள சரத்குமார், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்தில் மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், ‛‛விஜயகாந்த் முழுமையாக குணமாகி வருவார் என நம்பினேன். அவர் மறைந்த நாளை கருப்பு தினமாகவே கருதுகிறேன். தொடர்ந்து 5 படங்களில் எனக்கு வாய்ப்பு தந்தார். தனக்கு போட்டியாக வந்துவிடுவேன் என கருதாமல் தொடர்ந்து அவர் தயாரிக்கும் படங்களில் என்னை நடிக்க வைத்தார். விஜயகாந்த்தின் சிறந்த பண்புகள், குணாதிசயங்களை நாம் பின்பற்ற வேண்டும்'' என்றார்.