நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா பெரிய பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வருகிறது. விஷாலுக்காக தாங்கள் செலுத்திய கடன் தொகையை விஷால் திருப்பித் தரவில்லை என்று லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நடந்து வரும் நிலையில் லைகா நிறுவனத்தின் சொத்துகளை முடக்க வேண்டும் என்று விஷால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "என்னுடைய விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனம் தயாரித்த சண்டக்கோழி 2 திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலைட் உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் 2018ல் 23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி படம் வெளியிடப்பட்டது. அதற்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தாததால், அபராத தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்ச ரூபாயை நான் செலுத்தினேன்.
என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய லைகா நிறுவனம், பல இடங்களில் கடன் பெற்று 500 கோடி ரூபாய் செலவில் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் சரியாக ஓடவில்லை என்றால் கடுமையான நிதி நெருக்கடியை லைகா நிறுவனம் சந்திக்க நேரிடும். எனக்கு கிடைக்க வேண்டிய தொகை கிடைக்காமல் போய்விடும். லைகா நிறுவனம் ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்பதால் நிறுவனத்தை மூடிவிட்டு தயாரிப்பாளர் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதற்கும் வாய்ப்புள்ளது.
எனவே, நான் செலுத்திய ஜிஎஸ்டி தொகை மற்றும் அபராதத் தொகையை, வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 423 ரூபாய்க்கான உத்தரவாதத்தை லைகா நிறுவனம் தருமாறு அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை ஆர்பிஎல் வங்கியில் லைகா நிறுவனம் வைத்துள்ள சொத்துகளை முடக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. விஷாலின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு லைக்கா நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை வருகிற 19ம் தேதிக்கு தள்ளி வைத்தது.