நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழில் தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். தற்போது அயலான், இந்தியன்-2 போன்ற படங்களில் அவர் நடித்திருக்கிறார். மேலும் பாலிவுட் சினிமாவில் பல படங்களை தயாரித்தவரும், நடிகருமான ஜாக்கி பக்னானி என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வரும் ராகுல் பிரீத் சிங், 2024 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் தற்போது வருகிற பிப்ரவரி 22ஆம் தேதி கோவாவில் ராகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பக்னானி ஆகியோரின் திருமணம் நடைபெற இருப்பதாக பாலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது. ஜாக்கி பக்னானி, த்ரிஷா கதையின் நாயகியாக நடித்து வெளியான மோகினி என்ற படத்தில் சந்தீப் என்ற ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.