ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் | ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி |
கேஜிஎப், கேஜிஎப்-2 படங்களை அடுத்து பிரசாந்த் நீல் இயக்கி திரைக்கு வந்துள்ள படம் சலார். பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 22ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் திரைக்கு வந்த ஒரு வாரத்தில் 500 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இப்படத்திற்கு ஏற்பட்ட கலவையான விமர்சனங்கள் காரணமாக எதிர்பார்த்தபடி வசூலிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதனால் சலார் படத்தை திரைக்கு வந்து நான்கு வாரங்களுக்கு முன்பாகவே ஜனவரி 12ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஸ் என அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து வந்த பிரபாஸுக்கு இந்த சலார் படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்று தெரிகிறது.