நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கேஜிஎப், கேஜிஎப்-2 படங்களை அடுத்து பிரசாந்த் நீல் இயக்கி திரைக்கு வந்துள்ள படம் சலார். பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 22ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் திரைக்கு வந்த ஒரு வாரத்தில் 500 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இப்படத்திற்கு ஏற்பட்ட கலவையான விமர்சனங்கள் காரணமாக எதிர்பார்த்தபடி வசூலிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதனால் சலார் படத்தை திரைக்கு வந்து நான்கு வாரங்களுக்கு முன்பாகவே ஜனவரி 12ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஸ் என அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து வந்த பிரபாஸுக்கு இந்த சலார் படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்று தெரிகிறது.