சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் | இப்போதும் நான் தான் வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் : பஹத் பாசில் | 'கருடன்' படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு | அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? | 'ஸ்டார்' படம் முதல் நாள் வசூல் எவ்வளவு ? | 'பாகுபலி 3' போன்று 'கேஜிஎப் 3' பற்றியும் வெளியான புதிய தகவல் | தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், பிரேம்ஜி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் விஜய் 68வது படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட சில பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அடுத்தபடியாக விஜய் 68வது படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறுவதாக ஒரு செய்தி வெளியாகி வந்த நிலையில் தற்போது அது உறுதியாக இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பே இலங்கை சென்றுவிட்ட இயக்குனர் வெங்கட் பிரபு அங்கு படப்பிடிப்பை தொடங்குவதற்கான வேலைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இன்னும் சில தினங்களில் விஜய்யும் இலங்கைக்கு புறப்பட்டு செல்ல உள்ளார். தற்போது இலங்கையில் இருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபுவை அடையாளம் கண்டு கொண்ட இலங்கை ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.