மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
பிரேமம் என்கிற சூப்பர் ஹிட் படத்தின் மூலமாக மலையாளம் மட்டுமின்றி தென்னிந்திய அளவில் பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். அவரது படத்தின் மூலம் அறிமுகமான கதாநாயகிகள் இப்போதும் பரபரப்பாக பிசியான நடிகைகளாக வலம் வருகின்றனர். பிரேமம் படத்திற்கு பிறகு படம் இயக்காமல் கிட்டத்தட்ட ஏழு வருட இடைவெளி விட்டுவிட்ட அல்போன்ஸ் புத்ரன், கடந்த வருடம் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் கோல்டு என்கிற படத்தை இயக்கினார். ஆனால் இத்தனை வருட காத்திருப்பு வீணானது போல அந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் அந்த படத்தின் தோல்வி குறித்து சமீபத்தில் அல்போன்ஸ் புத்ரன் கூறும்போது, “பிரித்விராஜ் நடித்ததால் கோல்டு படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு காரணமாக கிட்டத்தட்ட ரிலீசுக்கு முன்பே 40 கோடி வரை பிசினஸ் பேசப்பட்டது. ஆனால் திட்டமிட்டு சிலரால் படம் பற்றி எதிர்மறையாக பரப்பப்பட்டு தியேட்டர்களில் இருந்து வலுக்கட்டாயமாக தூக்கப்படும் விதமாக உள்ளடி வேலைகள் நடைபெற்றன. ஒரு கவுரவமான தோல்வியை கூட பெறவிடாமல் தடுக்கும் அளவிற்கு கோல்டு படத்திற்கு எதிராக ஒரு குறிப்பிட்ட நபரின் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது” என்று கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.