நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் என்ற 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் விரைவில் ஆரம்பமாகிறது. இந்த தொடரின் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஐதராபாத் அணியின் உரிமையாளராக நடிகர் ராம் சரணும், மும்பை அணியின் உரிமையாளராக அமிதாப்பச்சனும், ஸ்ரீநகர் அணியின் உரிமையாளராக அக்ஷய் குமாரும், பெங்களூர் அணியின் உரிமையாளராக ஹிருத்திக் ரோஷன் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த வரிசையில் தற்போது சென்னை அணியின் உரிமையாளராக நடிகர் சூர்யா அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலை அவர் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். அதில், ஐஎஸ்பிஎல் டி-10 தொடரில் எங்களது சென்னை அணியின் உரிமையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் பாரம்பரியத்தை உருவாக்குவோம் என்று பதிவிட்டுள்ளார் சூர்யா. அதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.