நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் ரஜினி தற்போது 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. 'ஜெய்பீம்' படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கி உள்ளது. ஏற்கெனவே அங்கு முகாமிட்டிருக்கும் படக்குழு ரஜினி இல்லாத காட்சிகளை படமாக்கி வந்தனர்.
இந்த நிலையில் தனது போர்ஷனில் நடிப்பதற்காக ரஜினி சென்றுள்ளார். நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்றார். ரஜினிகாந்த் வருவதாக தகவல் அறிந்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் விமான நிலையம் வந்து அவரை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் படப்பிடிப்புக்கு புறப்பட்டுச் சென்றார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகள் எதையும் அவர் பார்வையிடவில்லை. பெரும் துயரத்தில் இருக்கும் மக்களை பற்றி எந்த கவலையும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பகுதியிலேயே ரஜினி நடித்துக் கொண்டிருப்பது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.