மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
நடிகர் ரஜினி தற்போது 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. 'ஜெய்பீம்' படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கி உள்ளது. ஏற்கெனவே அங்கு முகாமிட்டிருக்கும் படக்குழு ரஜினி இல்லாத காட்சிகளை படமாக்கி வந்தனர்.
இந்த நிலையில் தனது போர்ஷனில் நடிப்பதற்காக ரஜினி சென்றுள்ளார். நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்றார். ரஜினிகாந்த் வருவதாக தகவல் அறிந்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் விமான நிலையம் வந்து அவரை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் படப்பிடிப்புக்கு புறப்பட்டுச் சென்றார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகள் எதையும் அவர் பார்வையிடவில்லை. பெரும் துயரத்தில் இருக்கும் மக்களை பற்றி எந்த கவலையும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பகுதியிலேயே ரஜினி நடித்துக் கொண்டிருப்பது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.