அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி |
சமீபத்தில் பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த அனிமல் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு கலவையான மற்றும் கடுமையான விமர்சனங்கள் வெளிப்பட்டாலும் அதையும் தாண்டி படம் மிகப்பெரிய அளவில் வசூலித்தது.
ஹிந்தியில் ராஷ்மிகா இதற்குமுன் நடித்த இரண்டு படங்கள் சரியாக போகாத நிலையில் இந்த படம் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை கொடுத்துள்ளது. அதே சமயம் ராஷ்மிகா நடித்த அவரது கீதாஞ்சலி கேரக்டரில் நடிப்பதற்காக முதலில் ஒப்பந்தமானவர் பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா. ஆனால் இந்த படத்திற்கு அவர் சரிப்பட்டு வர மாட்டார் என நினைத்த இயக்குனர் சந்தீப் வங்கா ரெட்டி அவருக்கு பதிலாக தான் ராஷ்மிகாவை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்தார்.
இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் சந்தீப் கூறும்போது, “ஒன்றரை வருடத்திற்கு முன்பே பரினீதி சோப்ராவை நான் இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்து விட்டேன். ஆனால் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாக அவரை அழைத்து லுக் டெஸ்ட் எடுத்தபோதுதான் கீதாஞ்சலி கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக பொருந்தவில்லை என்பதை உணர்ந்தேன்.
ஆனால் ஆர்வமுடன் இருந்த அவரை பார்த்தபோது எனக்கு வருத்தமாக இருந்தது. அவரிடம் என்னை மன்னித்து விடு என்று மன்னிப்பு கேட்டேன். பரினீதி சோப்ராவின் நடிப்பை எனக்கு துவக்கத்தில் இருந்தே பிடிக்கும். நான் இயக்கிய கபீர் சிங் படத்தில் கூட அவரை பிரீத்தி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால் எதுவுமே நடக்கவில்லை” என்று கூறியுள்ளார்.