ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒளிப்பதிவாளர், ரவி கே.சந்திரன், "யான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் மாஜி நடிகை ராதாவின் இளைய மகளான துளசி தான், ஹீரோயின். இப்படத்தில் துளசிக்கு, "கஜினிபடத்தில் அசின் நடித்தது போன்ற, "பவர்புல் வேடமாம். அதனால், துளசியை புக் செய்வதற்கு முன், இவரால் அத்தனை பெரிய வேடத்தில் நடிக்க முடியுமா? என்ற சந்தேகம் இயக்குனருக்கு ஏற்பட்டதாம்.
"கடல் படத்தில் துளசி ஏற்கனவே நடித்திருந்ததால், மணிரத்னத்தை அணுகி, துளசியின் நடிப்பாற்றல் குறித்து கேட்டாராம், இயக்குனர். அப்போது, "சின்னப் பெண் தான். ஆனால், கேமரா முன் வந்துவிட்டால், கேரக்டராகவே மாறிவிடுவார். என் அனுபவத்தில், முதல் படத்திலேயே இத்தனை அற்புதமாக நடித்த நடிகையை, இதுவரை பார்த்ததில்லை என்ற, மணிரத்னம்,"எத்தனை வெயிட்டான வேடமென்றாலும், துளசியை நம்பிக் கொடுக்கலாம் என்று உத்தரவாதம் கொடுத்தாராம். இதைக் கேள்விப்பட்டதிலிருந்து, துளசி, சந்தோஷத்தில் மிதக்கிறாராம்.