ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை |
தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா கேரளாவை சேர்ந்த கிறிஸ்டியன் குடும்பத்தை சேர்ந்தவர். இயற்பெயர் தினா மரியம் குரியன். சினிமாவுக்காக நயன்தாரா ஆனார். இந்து கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்து கடவுள்கள் மீது நம்பிக்கை இருந்தாலும் அடிப்படையில் கிறிஸ்தவ பெண்ணாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று தனது கணவர் விக்னேஷ் சிவன், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தார். இந்த படங்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
“அன்பிலும் பிரார்த்தனைகளிலும் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். கடவுளை நம்புங்கள். அது உங்களை வாழ வைக்கும் மிகப்பெரிய சக்தி” என்று பதிவிட்டுள்ளார். இந்த படங்கள் நேற்று வைரலாக பரவியது.