விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் |
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர் முத்துக்காளை, வடிவேலுவின் குரூப்பில் இணைந்து ஏராளமான படங்களில் காமெடியானாக நடித்துள்ளார். சண்டை கலைஞராக சினிமாவுக்குள் வந்தவர், சண்டைகளில் காமெடியாக நடித்து, பின்னர் காமெடி நடிகராகவே மாறினார். சில படங்களில் சண்டை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.
படிப்பின் மீது ஆர்வம் கொண்ட முத்துக்காளை, கடந்த 2017ம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் பி.ஏ. வரலாறு படித்து தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து 2019ம் ஆண்டு எம்.ஏ தமிழ் படித்தவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றார். இந்நிலையில், தற்போது இளங்கலை தமிழ் இலக்கியத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றுள்ளார். இது இவரது மூன்றாவது பட்டமாகும்.
இதுகுறித்து அவர் கூறும்போது “சொந்த ஊர் ராஜபாளையம், சின்ன வயதில் எனக்கு படிப்பை விட காராத்தேவில்தான் ஆர்வம். 18 வயதில் பிளாக் பெல்ட் வாங்கினேன். அப்படியே சினிமா ஆசையில் சென்னை வந்து, சண்டை கலைஞராக பணியாற்றி, சண்டை இயக்குனராகி அப்படியே நடிகராகிவிட்டேன். ஆனால் என் பெற்றோர்களுக்கு நான் நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் படிக்கத் தொடங்கினேன். இப்போது 3 பட்டங்களை பெற்றிருக்கிறேன். அடுத்து முனைவர் பட்டம் பெறும் முயற்சியில் ஈடுபடுவேன்” என்றார்.