மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
கிட்டத்தட்ட 49 படங்களில் நடித்து முடித்து விட்ட நடிகர் தனுஷ் ஏற்கனவே 'ப பாண்டி' என்கிற படத்தை இயக்கி இயக்குனராகவும் மாறினார். அதன்பிறகு சிறிய இடைவெளிவிட்டு தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவரது நடிப்பில் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக தயாராகி வருகிறது.
இந்த நிலையில் தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதோடு தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என இதற்கு பெயரிட்டுள்ளனர்.
தனுஷின் இயக்கம் பற்றி நடிகர் எஸ்.ஜே..சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், “அவரு சூப்பர் டைரக்டரும் கூட... தனுஷுக்கு டைரக்ஷன் மேல என்ன வெறி ! என்ன அர்ப்பணிப்பு ! அவர் வேற லெவல். தனுஷ் 50வது படத்தின் கதையும் வித்தியாசமான ட்ரீட்மென்ட்டும் சர்வதேச தரத்தில் இருக்கிறது. அவரது 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்கும் ஆல் த பெஸ்ட் என்று கூறியுள்ளார்.