ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பரதேசி படத்தை பார்த்துவிட்டு அம்மா முகத்தில் தெரிந்த பூரிப்பு ஒன்று போதும், நிறைய விருதுகள் கிடைத்த மாதிரி இருந்தது என்று சிலிர்க்கிறார் நடிகர் அதர்வா. மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா. பாணா காத்தாடி, முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் நடித்தார். அதன்பிறகு சமீபத்தில் வெளிவந்த பாலாவின் பரதேசி படத்தில் நடித்தார். இப்படம் நிறைய பாராட்டுகளை பெற்றுள்ளது. அதோடு சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருதும் இப்படத்திற்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ள நடிகர் அதர்வா, பரதேசி படத்திற்கு பிறகு எந்த ஒரு கேரக்டர் கொடுத்தாலும் அதை ஈஸியா பண்ணிடலாம் என்ற நம்பிக்கை வந்திருக்கு. பரதேசி படத்துக்காக நான் பட்ட கஷ்டங்களை சொன்னால் அது மிகையாது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அப்படத்தில் நடித்திருக்கேன். பாலா படத்தில் நடித்தால் கடவுளை பக்கத்தில் பார்க்கிற அனுபவம் கிடைக்கும், நான் கடவுள் பக்கத்திலேயே போய் வந்திருக்கேன், அதற்காக பாலா சாருக்கு நன்றி. ஒவ்வொரு நாளும் தவம் மாதிரி இருந்து பரதேசி படத்தை நடித்து முடித்தேன்.
இந்தபடத்துக்கு தேசிய விருது கிடைத்தால் சந்தோஷம் தான், ஆனால் கிடைக்கவில்லை, என்ன செய்வது இன்னும் வாழ்க்கை இருக்கு. பாலா சார் மாதிரி என்னை, வழி நடத்த இன்னும் எத்தனையோ பேர் இருக்காங்க. பரதேசி படத்தை என் அம்மா பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, அவர் முகத்தில் தெரிந்த பூரிப்பு, இதுவரை நான் பார்த்திராத ஒரு பூரிப்பு, அது ஒன்று போதும், நான் நிறைய விருதுகள் பெற்ற மாதிரி இருந்தது. பரதேசி படத்திற்கு அடுத்து என்ன படம் என்று இன்னும் முடிவாகவில்லை, முடிவானதும் நானே சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.