ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
அப்பா கஸ்தூரிராஜா, அண்ணன் செல்வராகவன் வழியில் நடிகர் தனுஷ், 'பவர் பாண்டி' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அவர் இயக்கிய முதல் படமே வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து பல ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்த அவர் தற்போது தனது 50வது படத்தை இயக்கி முடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் தனுஷ் தனது 3வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். படத்திற்கு 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 'வழக்கமான காதல் கதை' என்ற டேக் லைன் கொடுக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார், லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவும், தாய் விஜயலட்சுமியும் இணைந்து வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார்கள். பவிஷ், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், ராபியா, ரம்யா, வெங்கி ஆகியோர் நடிக்கிறார்கள். ரொமான்ட்டிக் காதல் கதை என்கிற ஜார்னரில் படம் உருவாகிறது.