நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்காவின் மூன்றாவது படம் அனிமல். ரன்பீர் கபூர், அணில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் உருவான இந்த அனிமல் படம் ஹிந்தியில் தயாரான போதும், தமிழ், தெலுங்கிலும் வெளியானது. மேலும் இப்படம் திரைக்கு வந்தபோது பாலியல் அத்துமீறல், ஆணாதிக்கம் போன்ற பிற்போக்குத்தனமான சிந்தனை அப்படத்தில் இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தபோதும் இந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து அனிமல் படம் 800 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்திருக்கிறது.
இந்த நிலையில் அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வந்த நிலையில், தற்போது இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா அளித்துள்ள ஒரு பேட்டியில், அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் 2025ம் ஆண்டு தொடங்க இருப்பதாகவும், இரண்டாம் பாகத்திற்கு அனிமல் பார்க் என்று டைட்டில் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.