நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்காவின் மூன்றாவது படம் அனிமல். ரன்பீர் கபூர், அணில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் உருவான இந்த அனிமல் படம் ஹிந்தியில் தயாரான போதும், தமிழ், தெலுங்கிலும் வெளியானது. மேலும் இப்படம் திரைக்கு வந்தபோது பாலியல் அத்துமீறல், ஆணாதிக்கம் போன்ற பிற்போக்குத்தனமான சிந்தனை அப்படத்தில் இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தபோதும் இந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து அனிமல் படம் 800 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்திருக்கிறது.
இந்த நிலையில் அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வந்த நிலையில், தற்போது இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா அளித்துள்ள ஒரு பேட்டியில், அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் 2025ம் ஆண்டு தொடங்க இருப்பதாகவும், இரண்டாம் பாகத்திற்கு அனிமல் பார்க் என்று டைட்டில் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.