நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
காமெடி நடிகராக கொடி கட்டி பறந்தவர் வடிவேலு. அவரது காமெடிகள் இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறது. சில வருட இடைவெளிக்கு பிறகு அவர் 'மாமன்னன்' படத்தில் சீரியசான கேரக்டரில் நடித்தார். அந்த படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது. சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது. ஆனால் மாமன்னன் படத்திற்கு பிறகு தனக்கு அழவைக்கும் சீரியசான கேரக்டர்கள்தான் வருகிறது என்று அதே சர்வதேச பட விழாவில் வருத்தத்துடன் குறிபிட்டார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது: பழைய படங்களைப் பார்த்தால் சவுகார் ஜானகி அழுதுகொண்டேயிருப்பார். 'வீட்ல தொல்ல தாங்காம தானே இங்க வந்தோம். நீ ஏன்மா அழுகுற' என கேட்பார்கள். அழுவதெல்லாம் இப்போது வொர்க்கவுட் ஆகாது. ஆனால், அப்படியிருந்தும் 'மாமன்னன்' கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த விருது நீங்கள் எனக்கு கொடுத்தது அழ வைத்ததற்கு. இப்போதெல்லாம் எனக்கு வரும் கதைகள் ஒரே சோகக் கதைகளாகவும், அழுகை கதைகளாக வருகிறது. அவர்களிடம் நான் கொஞ்ச நாட்கள் ஆகட்டும். பிறகு இப்படியான கதைகளில் நடிக்கிறேன் என்று சொன்னேன். என்றார்.