விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
த்ரிஷாவைப்போலவே மதராசப்பட்டினம் எமி ஜாக்சனும் விலங்குகள் மீது அதிகம் பாசம் கொண்டவராம். சமீபத்தில் அவர் மெக்சிக்கோ நாட்டுக்கு சென்றபோது, அங்குள்ள கடற்கரை பகுதியில் ஒரு டால்பின் மீனுடன் நீந்தியிருக்கிறார். அப்போது அந்த டால்பினை அவருக்கு ரொம்ப பிடித்து விட்டதாம். அந்த டால்பின் அழகானது மட்டுமின்றி, நாம் என்ன சொன்னாலும் அதை புரிந்து கொள்ளும் தன்மை கொண்டது. அதனால் அதை பராமரிக்கத் தேவையான அனைத்து உதவியையும் தான் எடுத்துக்கொள்வதாக சொல்லி தத்தெடுத்தாராம்.
அங்கிருந்து வந்த பிறகும் அவரால் அந்த டாப்லினை மறக்க முடியவில்லையாம். அது அடிக்கடி நினைவில் வந்து கொண்டேயிருக்கிறதாம். இதனால் இனி படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் நாட்களில் மெக்சிகோ செல்ல திட்டமிட்டுள்ள எமி, அந்த டால்பினுடன் தண்ணீருக்குள் நீந்துவேன் என்கிறார். இப்படி முதன்முறையாக ஒரு டால்பினை தத்தெடுத்து அதன் அறக்கட்டளைக்கு தான் உதவி செய்திருப்பதை பெருமையாக சொல்லி வரும் அவர், இனி இதுபோன்ற மனங்கவர்ந்த பிராணிகள் மற்றும் விலங்களுக்கு தனது வருமானத்தில் இருந்து ஒரு தொகையை செலவு செய்யும் திட்டமிடடுள்ளதாக கூறுகிறார் எமி.