ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருப்பதியில், கோவில் ஊழியர் ஒருவர் நடிகர் லாரன்ஸின் தாயை பிடித்து கீழே தள்ளியதில் வெறுத்துபோன லாரன்ஸ், ராஜபக்ஷேவை சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்கிறார்கள், ஆனால் நம்மூர்காரர்களை பிடித்து தள்ளுகிறார்கள் என்று வேதனை பட தெரிவித்துள்ளார். நடிகர் லாரன்ஸ் தனது தாயார் மற்றும் குடும்பத்துடன் திருப்பதி சென்றார். வி.ஐ.பி. தரிசனத்தில் குடும்பத்துடன் அதிகாலை சிறப்பு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்குள்ள ஊழியர் ஒருவர் வேகமாக செல்லும்படி லாரன்சின் தாய் மற்றும் அவரது குடும்பத்தாரை பிடித்தனர் தள்ளினார். இதில் லாரன்சின் தாய் தடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த லாரன்ஸ் அந்த ஊழியருடன் வாக்குவாதம் செய்தார்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ், எனது தாயாருக்கு ஆபரேஷன் நடந்துள்ளது. ஆபரேஷன் நல்லபடியாக நடந்தால் திருப்பதிக்கு வருவதாக வேண்டியிருந்தேன். அதன்படி திருப்பதியில் சாமி தரிசித்துக் கொண்டிருந்தபோது ஊழியர் ஒருவர் எனது தாயை பிடித்து தள்ளிவிட்டார். இதில் அவர் கீழே விழுந்துவிட்டார். இது மரியாதை அல்ல கொடூரமான செயல் ஆகும். எனது குடும்பத்தை அவமானப்படுத்துவது போல் உள்ளது. அதனால் தான் ஆவேசமாக பேசிவிட்டேன்.
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு கோவில் நிர்வாகம் சிவப்பு கம்பளம் விரித்து மரியாதை அளிக்கிறது. ஆனால் இந்தியாவை அதிலும் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நடிகரான என்னுடைய தாயை பிடித்து கீழே தள்ளியது தரக்குறைவான செயல் ஆகும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.