பாலகிருஷ்ணாவின் மகனுக்கு அம்மாவாக ஷோபனா? | சூர்யா 44வது படம் கேங்க்ஸ்டர் படம் இல்லை - கார்த்திக் சுப்புராஜ் | திருமணத்திற்கு தயாரான ரம்யா பாண்டியன் : யோகா மாஸ்டரை கரம் பிடிக்கிறார் | தள்ளி வைக்கப்பட்ட இந்தியன் 3 ரிலீஸ் | சிவாவை தொடர்ந்து பிரசாந்த் நீலுடன் இணையும் அஜித் | கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா டீசர் வெளியானது | கர்ப்பமாக இருக்கும் 'கபாலி' கதாநாயகி ராதிகா ஆப்தே | பிளாஷ்பேக் : வில்லனுக்கு மரியாதை தந்த ரஜினி | பிச்சைக்காரனாக நடிக்க நிஜமாகவே பிச்சை எடுத்த கவின் | மோசடி நிறுவனத்துடன் தொடர்பா? - தமன்னாவிடம் அமலாக்கத்துறை திடீர் விசாரணை |
பாலிவுட் முன்னணி நடிகரான ஆமிர்கான் நடிப்பில் கடந்த வருடம் லால் சிங் சத்தா என்கிற திரைப்படம் வெளியானது. கரீனா கபூர் கதாநாயகியாக நடிக்க, தெலுங்கு நடிகர் நாகசைதன்யா முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தை அத்வைத் சந்தன் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தை ஆமிர்கானே தயாரித்திருந்தார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் தோல்வி படமாக அமைந்தது.
படம் வெளியாகி ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது இந்த படத்தின் காஸ்டிங் இயக்குனராக பணியாற்றிய முகேஷ் சப்ரா என்பவர் இந்த படம் தோல்வி அடைந்த பின்னரும் அடுத்த சில நாட்களில் ஆமிர்கான் படக்குழுவினர் அனைவரையும் அழைத்து பார்ட்டி வைத்தார் என்கிற புதிய தகவலை தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, 'இந்த படத்தை ஆமிர்கான் ரொம்பவே எதிர்பார்த்தார். ஆனால் அந்த படம் எதிர்பாராத தோல்வியை தழுவியது. இருந்தாலும் படக்குழுவினர் அனைவரையும் அழைத்து ஒரு பார்ட்டி கொடுக்க விரும்பினார் ஆமிர்கான். அனைவரும் ஆச்சரியத்துடன் அதில் கலந்து கொண்டோம். அதில் அவர் பேசும்போது உங்கள் பணி மகத்தானது என்று பாராட்டினார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதற்கு முழு பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று அனைவரிடமும் வருத்தமும் தெரிவித்தார். இந்த பார்ட்டி விபரம் வேறு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை” என்று கூறியுள்ளார்.