அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
சல்மான்கான், கத்ரினா கைப் நடித்த 'டைகர் 3' படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இதனால் சல்மான் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகிறார்கள். இதன் உச்சபட்சமாக மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற ஊரில் படம் தொடங்கியதும் தியேட்டருக்குள் சரமாரியாக பட்டாசை கொழுத்தினார்கள்.
இதனால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தார்கள். பெண்கள் உள்ளிட்ட சிலர் கீழே விழுந்து காயம் அடைந்தார்கள். தியேட்டர் முழுவதும் புகை மூட்டத்தால் சிலருக்கு மூச்சு திணறியது. இதனால் அந்த காட்சி ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து சல்மான்கான் தனது டுவிட்டரில் வருத்தத்தை பதிவு செய்துள்ளார். அதில், “தியேட்டருக்குள் பட்டாசு வெடிப்பது ஆபத்தானது. நமக்கும், பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தாமல் படத்தை பார்த்து ரசியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியிருக்கிறார்.